Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ராசிபுரம்: ராசிபுரம் வட்டம், சந்திரசேகரபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் இராசிபுரம் தீயணைப்புத் துறை மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலர் மூலம் தீ விபத்து இல்லா தீபாவளி பண்டிகை கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பேசிய தீயணைப்பு துறை அலுவலர் திரு. வெ.பலகார ராமசாமி அரசு அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் எனவும், பட்டாசு வெடிக்கும் போது பெற்றோர்களுடன் சேர்ந்து வெடிக்க வேண்டும் என்பதையும், நீர் நிரப்பிய வாளியுடன் பட்டாசு வெடிக்க வேண்டும் என்பதையும், ராக்கெட் போன்ற பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என்பதையும், மருத்துவமனை மற்றும் குடிசைப் பகுதிகளில் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என்பதையும் விளக்கிக் கூறி பட்டாசு வெடிக்கும் முறைகளையும் மாணவர்களுக்கு செய்து காட்டினார்.
மேலும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் வழங்கினர்.